இந்திய கிரிக்கெட்டில் புதிய தலைமுறை வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் இந்திய அணியின் எதிர்காலம் என்று கூறலாம். இவர்களில் யார் இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார் என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கேள்விக்கு பதிலாக 7 ஆஸ்திரேலிய வீரர்கள் சில சுவாரசியமான பதில்களை அளித்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட், அலெக்ஸ் கேரி, நேதன் லயன் ஆகியோர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார் என்று கணித்துள்ளனர். அதேசமயம், கேமரூன் கிரீன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சுப்மன் கில் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது குறுகிய கால கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அறிமுக போட்டியில் 171 ரன்கள் குவித்ததுடன், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லவும் முக்கிய பங்கு வகித்தார். கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் அவர் அபாரமாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். சுப்மன் கில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவங்களிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இவர் இந்திய அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலிய வீரர்கள் பெரும்பாலானோர் ஜெய்ஸ்வாலின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்றாலும், கில் மற்றும் பண்ட் போன்ற வீரர்களும் இந்திய கிரிக்கெட்டில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. வருகின்ற காலங்களில் இந்த மூன்று வீரர்களும் இந்திய கிரிக்கெட்டில் எவ்வளவு வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.