
மத்திய அரசில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருமானவரித்துறையில் canteen attendant பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு 18 முதல் 25 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும். இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த பணிகளுக்கு செப்டம்பர் 8-ம் தேதி முதல் செப்டம்பர் 22ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கான தேர்வுகள் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ56,900 வரையில் ஊதியமானது வழங்கப்படும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.incometax.gov.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.