மயிலாப்பூரில் 525 கோடி ரூபாய் நிதி நிறுவன மோசடி வழக்கில் அதன் தலைவர் தேவநாதன் யாதவ் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 525 கோடி மோசடி செய்ததாக பாஜக வேட்பாளர் தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் இந்து ஸ்வாஸ்வத லிமிடட் சார்பில் அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நிறுவன தலைவரான தேவ நாதனை திருச்சி போலீசார் சற்று முன் கைது செய்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் இவர் சிவகங்கை தொகுதிக்காக பாஜக சார்பாக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.