
பொதுவாக மதுபான கடைகளை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இது தொடர்பான செய்திகள் கூட வந்திருக்கிறது. ஆனால் தற்போது வினோதமாக தங்கள் ஊருக்கு மதுபான கடை வேண்டும் என்று ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. அதாவது தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர், பொன்னகரம், பாலக்கோடு மற்றும் பாப்பிரெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட மது கடைகள் செயல்படுகிறது.
இந்நிலையில் வண்ணாத்திப்பட்டி, நல்லாம்பட்டி, ஆதனூர், பலஞ்சர அள்ளி, கெட்டூர், நலப்பரம்பட்டி ஆகிய 7 ஊர்களில் மது கடைகள் கிடையாது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மது கடை வேண்டி மனு கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் தங்கள் ஊரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரம் சென்று மதுபானங்கள் வாங்க வேண்டி இருப்பதால் எங்கள் ஊரில் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.