
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் பரேலியில் கடந்த 14 மாதங்களில் 9 பெண்கள் கழுத்தை நெரித்து ஆடை இல்லாமல் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் 45 முதல் 55 வயது உடையவர்கள். இந்த ஒன்பது குறைகளுமே ஒரே மாதிரியாகத்தான் நடந்துள்ளது.
யாராவது திட்டமிட்டு கொலைகளை செய்தார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ராட்சசன் திரைப்பட பாணியில் அரங்கேறிய இந்த கொலைகளை செய்த சைக்கோ கொலையாளி யார் என போலீசார் தேடி வருகிறார்கள்.