கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலசரிவு ஏற்பட்ட நிலையில் இதில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து 7வது நாளாக இன்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நிலச்சரிவில் சிக்கிய உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 கடந்துள்ளது.

இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு பேரிடர் தொடர்பாக தவறான செய்திகளை பரப்ப அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி பெற்றோர்களை இழந்த குழந்தைகளை வளர்ப்பது தொடர்பாக தவறான தகவல் பரவி வருவதாக கூறிய அவர், குழந்தைகளை வளர்க்க விண்ணப்பம் பெற்று குழந்தைகளை வழங்குவதாக பரவும் செய்தி உண்மை இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.