
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , பொதுத்துறை வங்கிகள் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காததற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் அபராதம் வசூலித்ததைக் கண்டித்து, “அபராத முறை” பிரதமர் நரேந்திர மோடியின் “சக்கரவியூகத்தின்” கதவு என்று கூறினார். சாதாரண இந்தியனின் முதுகை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கண்டனத்தை தெரிவித்தார்.
2019-2020 நிதியாண்டிலிருந்து தொடங்கி 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் நிச்சயம் மினிமம் பேலன்ஸ் என்பது இருக்க வேண்டும். அதாவது குறைந்தபட்சம் மினிமம் பேலன்ஸ் சில வங்கிகளில் ரூ.500 ஆக இருக்கும் நிலையில், சில வங்கிகளில் ரூ.1000 ஆக இருக்கிறது. ஒருவேளை மினிமம் பேலன்ஸ் தொகையை விட குறைவாக வங்கி கணக்கில் பணம் இருந்தால் அதற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கி நிர்வாகம் அபராதம் வசூலிக்கிறது.
இந்தத் நடவடிக்கையின் கீழ் சுமார் 8,500 கோடி ரூபாய் வசூலித்ததாக மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலில் வெளிவந்ததை அடுத்து அவர் மத்திய அரசின் மீது தனது கண்டனத்தை தெரிவித்தார்.
நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி திங்கள்கிழமை(ஜூலை 29) மக்களவையில் கூறியதாவது: நிதியாண்டில் சராசரி குறைந்தபட்சம் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காததற்காக அரசு நடத்தும் வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.2,331 கோடி அபராதம் விதித்துள்ளன என கூறினார்.