தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு  பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ள நிலையில் தமிழ் புதல்வன் திட்டத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் தொடங்குகிறது. தமிழ் புதல்வன் திட்டத்திற்காக 360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் தோராயமாக 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ஆதார் எண் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து அந்த நகலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆதார் எண் வரும் வரை இதை சான்றாக காண்பிக்கலாம். இந்த ஆவணங்களுடன் வங்கி அல்லது தபால் கணக்கு புத்தகம், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கிசான் கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம் தாசில்தார் அல்லது கெசட் அதிகாரி அளித்துள்ள அடையாளச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.