
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக மின் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படுவதால் அன்றைய நாள் மின்தடை செய்யப்படும். இது குறித்து அறிவிப்பு அப்பகுதிகளுக்கு முன்னதாகவே வெளியிடப்படும் நிலையில் சென்னையில் ஜூலை 25 இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கே.கே.நகர், ஐ.டி.சி., பூந்தமல்லி, போரூர், அம்பத்தூர், தண்டையார்பேட், அடையார், சோழிங்கநல்லூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.