
தமிழக ரேஷன் கடைகளில் மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, சீனி மற்றும் இலவசமாக் அரிசி விட்ட பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் விரைவில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொருள்களை டோர் டெலிவரி செய்ய அவற்றை பாக்கெட்டுகளாக மாற்ற வேண்டும் என்றும், பாக்கெட்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி விதிக்காவிட்டால் டோர் டெலிவரி செய்யப்படும் என்றும் அவர் உறுதி தெரிவித்தார். மேலும், ரேஷன் பொருள் டோர் டெலிவரிக்காக 6 மில்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.