
பீகாரை சேர்ந்த சோனு குமார் என்ற 29 வயது இளைஞர் பெங்களூரில் வசித்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் பீனியாவை சேர்ந்த குஸ்மா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதனிடையே அண்மையில் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் குஷ்மாவுடன் சோனுகுமார் திடீரென மாயமானார். இதனைத் தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் சோனுக்கு குமார் பல பெண்களுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.
அதுமட்டுமல்லாமல் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு பிறகு நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதுவரை இவர் பற்றி வேறு பெண்கள் யாரும் புகார் அளிக்கவில்லை என்றாலும் போலீசார் இந்த வழக்கை தீவிரமாக எடுத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய சோனு குமாரை வலை வீசி தேடி வருகிறார்கள்.