நாட்டையே உலுக்கிய ஹத்ராஸ் சம்பவம் குறித்த சிறப்பு விசாரணைக் குழு சமர்பித்த விசாரணை அறிக்கையில் நிகழ்ச்சி நடத்திய சாமியார் போலே பாபாவின் பெயர் இடம்பெறவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவானது 855 பக்கங்கள் கொண்ட அறிக்கையை உத்தரப் பிரதேச அரசிடம் சமர்ப்பித்தது.

இந்த நிலையில், விபத்து நடந்த விதம், உயிரிழந்தவர்களின் விபரங்கள் உள்ளிட்டவை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யாமல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக மட்டுமே அந்த அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.