இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து விட்டன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்து விட்டால் என்ன செய்வது என்று பலரும் அறியாமல் இருப்பார்கள்.

ஒருவேளை ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். அடுத்து https://cybercrime.gov.in/webform/Helpline.aspx என்ற இணையதள பக்கத்தில் Register complaint என்ற பகுதிக்குள் இருக்கும் நிதி மோசடி புகார் பிரிவை அனுப்பியதும் திறக்கும் பக்கத்தில் பெயர், மொபைல் எண் மற்றும் கேப்சாவை உள்ளிட்டு பயனாளராகிய விவரத்தை பூர்த்தி செய்து மோசடி தொடர்பான ஆவணங்களை பதிவேற்றி புகார் அளிக்கலாம்