குஜராத்தை சேர்ந்தவர் ரோஹித் கனுபாய் சோலங்கி. இவர் ரூ.1 லட்சம் திருடிய வழக்கில் போலீசார் இவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இதுவரை 19 திருட்டு சம்பவங்களை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும்  ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டில், AUDI சொகுசு காருடன் அவர் வாழ்ந்து வந்ததாகவும் குஜராத் போலீசார் தெரிவித்தனர். மேலும் 5 மாநிலங்களில் கைவரிசை காட்டியதும், திருடப்போகும் போது விமானங்களில் பயணித்ததும் தெரியவந்துள்ளது.