
தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் வருகின்ற ஜூலை 6ஆம் தேதி நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டு ஊதிய நிலுவைத் தொகையை வழங்க கோரி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊதியம் வழங்கிட தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. இருந்தாலும் நிலுவை தொகை வழங்கப்படவில்லை. இதனால் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் நாளை தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என தெரிகிறது. இந்தப் போராட்டம் நடப்பதற்கு முன்பு அரசு ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.