அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் மற்றும் சங்கீதா தம்பதியினருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த 38 நாட்களே ஆன நிலையில் அந்தக் குழந்தை கடந்த ஜூன் 14ஆம் தேதி உயிரிழந்து கிடந்தது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொல்லப்பட்டதாக குழந்தையின் தாத்தா வீரமுத்து பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த குழந்தையால் உயிருக்கு ஆபத்து மற்றும் கடன் பிரச்சனை ஏற்படும் என ஜோதிடர் ஒருவர் கூறியதால் அதனை நம்பி குழந்தையை கொன்று விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.