
தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த அரசு இந்த கல்வி ஆண்டு முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அதன்படி தற்போது மாணவர்கள் பயிலும் வகுப்பு மற்றும் வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாகக் கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பள்ளி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சிறு புத்தகங்களின் மூலம் மாணவர்களுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கி தொடர் வாசிப்பை செயல்படுத்துவது இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஒரு கதை ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் இந்த புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிலும் வகுப்பு மற்றும் வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாகக் கொண்டு மட்டுமே இந்த புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை நூலக பாட வேளையில் வாசிப்பு இயக்க புத்தகங்களை மாணவர்களிடம் அளித்து அவர்கள் முறையாக படிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை வாசிப்பு இயக்க புத்தக தொகுப்புகள் வழங்கப்படும். 4 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கால அட்டவணையில் நூலக பாட வேளைகள் இருப்பது உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.