அமெரிக்கன் நாட்டில் ஷெரிஸ் என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த சவுரவ் சோனி என்பவருடன் instagram மூலம் பழகியுள்ளார். இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பழகி வந்துள்ளனர். இந்த பழக்கத்தின் போது சௌரவ் சோனி தான் நகைக்கடை வைத்திருப்பதாக இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். இதை நம்பி அந்தப் பெண் அவரிடம் தங்க நகைகள் கேட்டுள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட அவர் கடையில் ரூ.300 மதிப்புள்ள போலி நகைகளை வாங்கியுள்ளார். பின்னர் அதில் தங்க முலாம் பூசி பல்வேறு காலங்களில் இளம் பெண்ணுக்கு அனுப்பி ரூ.6 கோடி வரை பணம் பெற்றுள்ளார்.

இந்த நகைகளை கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் இளம்பெண் காட்சிப்படுத்தியுள்ளார். அப்போது அது போலியானது என்பது தெரியவந்தது. இதனால் இந்தியாவுக்கு வந்த அந்த பெண் சௌரவ் சோனியிடம் அது தொடர்பாக கேட்டுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இந்திய தூதரகத்தின் உதவியுடன் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் இளம் பெண் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் சௌரவ் சோனி மற்றும் அவருடைய தந்தையை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.