
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 290 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.
இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆந்திராவில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவை தங்களது கூட்டணிக்கு அழைக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். அதன்படி மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருக்கும் சரத் பவார் தற்போது சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.