இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பல ஆபத்தான முறையில் சாகசம் செய்து சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் வீடியோ வெளியிடுகிறார்கள். அந்த வகையில் ஓடும் காரில் இருந்து ஒரு வாலிபர் சாகசம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பை சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருக்கிறது.

அப்போது காரின் முன் கதவை திறந்த ஒரு வாலிபர் கதவில் கால் வைத்து காரின் மேலே ஏறினார். அந்த கார் வேகமாக சென்ற நிலையில் வாலிபர் அசால்டாக காரின் மீது நின்று கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பலரும் அந்த வாலிபரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறி வருகிறார்கள். மேலும் இதுபோன்று இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள்.