
நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒவ்வொரு கட்டமாக நடந்து வருகிறது. 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றால், 2024இல் மட்டுமல்ல 2029ஆம் ஆண்டிலும் மோடிதான் பிரதமர் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்பு துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இதுவரை நடந்த 4 கட்ட தேர்தலிலேயே பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்து விட்டதாகவும். ஆதலால் இந்த முறை 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெல்வது உறுதி என்றும் கூறினார்.