மலையாள சினிமாவில் இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் உருவான பிரேமலு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் காதல் கலந்த காமெடி திரைப்படமாக உருவான பிரேமலு மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

இந்தப் படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் தற்போது படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தை கிரிஷ் இயக்கும் நிலையில், பகத் பாஸில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். மேலும் இந்த படம் 2025 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.