பிரபல ஹிந்தி நடிகை ரவீனா தாண்டன். இவர் தமிழில் சாது மற்றும் ஆளவந்தான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கதாநாயகிகளை விட ஹீரோக்களுக்கு தான் அதிக சம்பளம் வழங்குவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, நான் ஹீரோயினாக நடித்த காலகட்டத்தில் கதாநாயகிகளை விட கதாநாயகர்களுக்கு தான் சம்பளம் அதிகமாக வழங்குவார்கள். சம்பள விஷயத்தில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பாகுபாடு காட்டினார்கள்.

ஒரு ஹீரோ ஒரு படத்தில் சம்பாதிக்கும் பணத்தை நாங்கள் 15 படங்களும் நடித்தால்தான் சம்பாதிக்க முடிகிறது. நான் அனைத்து நடிகர்களையும் சொல்லவில்லை. ஆனால் பல நடிகர்கள் அதிக சம்பளமே பெற்றனர். நடிகைகள் வந்த படங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு நடித்தனர். இதனால்  சரியான திட்டமிடல் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது நடிகைகள் திட்டமிட்டு முன்னேறுவதோடு, கதைகள் தேர்வு மற்றும் சம்பள விஷயத்திலும் முன் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்று கூறினார். மேலும் இவர் தற்போது இந்தி படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.