தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரவீனா. இவர் தமிழில் ஒரு சில படங்களில் அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நிலையில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிரவீனா சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார்.

அதில் அவர் கூறியதாவது, மலையாள சீரியல்களில் கதை இயல்பாக இருக்கும். அதற்கு ஏற்றார் முக பாவனைகளை செய்தால் மட்டும் போதும். ஆனால் அதுவே தமிழில் ஓவர் ஆக்டிங் செய்ய வேண்டும். அதாவது தமிழ் சீரியல்களில் அதிக முக பாவனைகளை வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக அதிர்ச்சியாக எதுவும் நடந்தால் மிகவும் அதிர்ச்சியாக இருப்பது போன்றும் மகிழ்ச்சியாக ஏதாவது நடந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போன்று முகபாவனைகளை வைக்க வேண்டும். மேலும் இதையெல்லாம் தமிழ் சீரியல்களில் அட்ஜஸ்ட் பண்ணி தான் நடிக்க வேண்டி இருக்கிறது என்று கூறியுள்ளார்.