
நாடு முழுவதும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுப்பதற்கு புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது தேசிய எக்ஸ்பிரஸ் வே சாலைகளில் செய்யப்படும் முறைகேடுகள், போக்குவரத்து மீறல்களை தடுப்பதற்கு ஏஐ கேமரா பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கேமரா தானாக போக்குவரத்து மீறல்களை கண்டறியும். மேலும் அவ்வாறு விதிகளை மீறினால் அவர்களை உடனே படம் எடுத்து புகார் பதிவு செய்யும்.
இந்த கேமரா நாடு முழுக்க எக்ஸ்பிரஸ் வே சாலைகளில் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பெங்களூர்- மைசூர் சாலையிலும், சென்னை – பெங்களூர் சாலையிலும் பணிகள் முடிந்த பிறகு பொருத்தப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. படம் பிடித்த பிறகு அந்த வாகனம் பதிவு செய்யப்பட்டு உள்ள ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணிற்கு ஃபோன் மூலமாக அபராதம் அனுப்பப்படும். அதை ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரிலோ செலுத்தலாம்.