
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22 அன்று நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது. அதோடு கும்பாபிஷேகத்திற்கு பலருக்கும் அழைப்பிதழ்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22 அன்று ஒன்றிய அரசின் அனைத்து அலுவலகங்களுக்கும் பிற்பகலுக்கு மேல் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களிடமிருந்து வந்த கோரிக்கை மற்றும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.