
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு வழங்கப்பட உள்ளது. இதனைத் தவிர முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தால் வேஷ்டி சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தவிர பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பணம் மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் பொருள் இல்லா அட்டைதாரர்கள் தவிர்த்து அனைவருக்கும் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.