சென்னையில் வரும் 17ஆம் தேதி மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக, அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறும். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆர். மாளிகையில், காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அக்-17 ஆம் தேதி அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்… வெளியானது அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more