மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளிலே மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்வது தொடர்பான விவாதம் இந்த கூட்டத்திலே எடுத்துக் கொள்ளப்படுமா? அல்லது ரோகிணி குழுவின் அறிக்கையின்படி ஓபிசி பிரிவினரின் உட்பிரிவுகளுக்கு எந்த மாதிரியான இட ஒதுக்கீடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பது தொடர்பான விவாதம் என பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. இதைத்தவிர இந்தியா என்கின்ற பெயரை பாரத் என மத்திய அரசு சமீபத்திலே தொடர்ச்சியாக குறிப்பிட்டு இருக்கிறது. அது தொடர்பாகவும் ஏதேனும் பெயர் மாற்றம் தொடர்பான அறிவிப்பு இருக்குமா ? எனது கட்சிகள் எதிர்பார்க்கின்றன. அது குறித்த கேள்விகளையும் கேட்கின்றனர்.
இந்த கூட்டத்தொடரில் இப்படி பல்வேறு விஷயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கூட்டத்தொடர் முதல் நாள் பழைய நாடாளுமன்றத்திலேயே நடைபெறும் எனவும், அதற்கு அடுத்த நாளான விநாயகர் சதுர்த்தி பண்டிகை வட இந்தியாவில் கொண்டாடப்படும் நாளான செவ்வாய்க்கிழமை அன்று இந்த கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்படும் எனவும் கருதப்படுகிறது. அதாவது விநாயகர் சதுர்த்தி தினத்தன்று புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு துவக்க விழாவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை ஞாயிற்றுக்கிழமை கிடைக்குமா ? என எதிர் கட்சி காத்திருக்கின்றன.