தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சுமார் 15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து 3 விசைப்படைகளில் மீன் பிடிக்க சென்ற 15 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே தென்கிழக்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.