விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.அரியலூர் பிள்ளையார் கோவில் தெருவில் ராணி என்பவர் வசித்து வருகிறார் இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அடமானம் வைத்து முப்பதாயிரம் ரூபாய் பணத்தை வாங்கி வைத்துள்ளார். இவரது மகன் இன்பராஜ் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று ராணி அம்மன் கோவில் அருகே பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது இன்பராஜ் தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்தார்.

அதற்கு ராணி பணம் கொடுக்க மறுத்தார். அதனால் கோபமடைந்த இன்பராஜ் தனது தாயை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் முதுகில் குத்தினார். இதனால் படுகாயம் அடைந்த ராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இன்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.