
கடந்த ஜூன் 18 ஆம் தேதி டைட்டன் நீர்மூழ்கி கடலுக்கு அடியில் வெடித்த நிலையில் டைட்டானிக் பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இந்த விபத்து காரணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார். “டைட்டன் நீர்மூழ்கிக்கு நேர்ந்த விஷயம் எதுவும் வியப்பானது இல்லை. இந்த நீர்மூழ்கி கடல் அழுத்தம் காரணமாக வெடித்து இருக்கலாம்.” என்று ஜேம்ஸ் கேமரூன் கூறினார்.
மேலும் 110 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட டைட்டானிக் விபத்தில் உயிரிழந்தவர்களை விட இந்த விபத்தில் இறந்தவர்கள் மிக கொடூரமான வலியை அனுபவித்து இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விபத்தில் 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.