மலையாள திரையுலகில் பூஜாப்புரா ரவி என்று அழைக்கப்படும் பழம்பெரும் நடிகர் ரவீந்திரன் நாயர் (86) காலமானார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூரில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் காலமானார். 1962இல் ‘வேலுத்தம்பி தளவா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், 800 திரைப்படங்களிலும் 4,000 நாடகங்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவு கலை மற்றும் திரைத்துறைக்கு மாபெரும் இழப்பு என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.