மீனவர் உரிமைகளுக்காக போராடி வந்த வழக்கறிஞர் லிங்கன் பாஸ்டின் (50) திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று மரணம் அடைந்தார். குமரியைச் சேர்ந்த லிங்கன் மீனவர்களை கடல் பழங்குடிகளாக அறிவிக்க வேண்டி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. லிங்கன் மறைவுக்கு முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.