கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தை இறந்து விட்டார். இதனால் சிறுமியின் தாய் பெயிண்டரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மனைவி வெளியே சென்ற நேரத்தில் பெயிண்டர் தனது வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பெயிண்டரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தாயிடம் கதறி அழுத சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
“உயிருடன் இருப்பவரையா போஸ்ட்மார்ட்டம் செய்ய கூட்டிட்டு வந்தீங்க?”…. சிவகங்கை மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை..!!!!
சிவகங்கை மாவட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட நவீன் என்ற வாலிபர், திடீரென உயிருடன் இருப்பது தெரியவந்ததையடுத்து, அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உறவினர்கள் விடிய விடிய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்…
Read more“ஒரே நைட்டில் 1933 கேஸ்கள்!”… சென்னை முழுக்க விடிய விடிய நடந்த போலீசாரின் அதிரடி வேட்டை.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பெருநகர சென்னை காவல்துறை நள்ளிரவில் நடத்திய அதிரடி வேட்டை வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ஒரே இரவில் நடத்தப்பட்ட…
Read more