தமிழ்நாடு முன்னாள் டிஜிபி ஜாங்கிட் “குலசாமி” திரைப்படம் வாயிலாக நடிகராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாதிரத்திலேயே அவர் நடித்திருக்கிறார். இதில் விமல், தான்யா ஹோப் போன்றோரும் நடித்து உள்ளனர். இந்த படத்தை சரவண சக்தி இயக்கியுள்ளார். நடிகர் விஜய்சேதுபதி வசனம் எழுதி இருக்கு இந்த படத்தின் சூட்டிங் முடிந்துள்ளது. இத்திரைப்படம் திரைக்கு வருவதை அடுத்து ஜாங்கிட் மற்றும் விமல் புகைப்படங்களுடன் தியேட்டர்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இதை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து ஜாங்கிட் வெளியிட்டுள்ள பதிவில், “நான் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குலசாமி திரைப்படம் திரைக்கு வருகிறது. சிறுமிகளுக்கு நடக்கும் தொல்லைகளையும், அவர்களை போலீஸ் எப்படி காப்பாற்றுகிறது என்பதையும் குறித்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் தயாராகி இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.