திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகம்பட்டி பகுதியில் மதன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மதன் குமார் வீட்டிற்கு முன்பாக மருந்து தாய் மற்றும் சகோதரியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பாம்பு வீட்டிற்குள் நுழைந்ததால் அலறியடித்து கொண்டு அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 6 அடி நீளம் உடைய சாரைப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனையடுத்து அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.