ஏப்ரல் 11ம் தேதி முதல் 24ம் தேதி வரை 6 – 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப். 11 – தமிழ், 12ம் தேதி – ஆங்கிலம், 18ம் தேதி – கணக்கு, 19ம் தேதி – அறிவியல், 24ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும். தேர்வு முடிந்து ஏப்.25ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.