வெம்பக்கோட்டை பகுதிகளில் ஆமணக்கு விதைகள் அறுவடை தீவிரமாக நடந்து வருகின்றது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் சுப்பிரமணியபுரம், சல்வார்பட்டி, இறவார் பட்டி, நதிக்குடி, கோட்டைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆமணக்கு பயிரிடப்பட்டிருக்கின்றது.

மேலும் இங்கே அவ்வப்போது மழை பெய்ததன் காரணமாக ஆமணக்கு நன்றாக விளைந்து இருக்கின்றது. நேற்று வியாபாரிகள் நேரில் வந்து இங்கு விளைந்த ஆமணக்கு வாங்கி சென்றார்கள். அவனுக்கு கிலோவுக்கு ரூபாய் 70 முதல் குவிண்டால் ரூபாய் 7000 வரை விற்பனை செய்யப்படுகின்றது.