கோவில்பட்டியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி முன்னிலை வகிக்க இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் என்.முகமது ரியாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, இந்தியாவில் இந்த வருடம் ஆக்கி உலகக்கோப்பை போட்டி நடைபெறுவதை நாம் சரித்திர சாதனையாக பார்க்க வேண்டும். பள்ளி மாணவர்கள் படிப்பில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் அதேபோல் ஆக்கி போட்டியிலும் ஆர்வத்தை காட்ட வேண்டும்.

ஆக்கி  விளையாட்டில் இந்த பள்ளி மாணவர்களும் தமிழ்நாடு அணையில் மட்டுமல்லாமல் இந்திய அணியிலும் இடம் பெற வேண்டும் என பேசினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்திருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி கமிட்டி உறுப்பினர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சிக் கழக செயலாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.