தனுஷ் எடுத்துள்ள முடிவு பற்றி அறிந்தவர்கள் அதுதான் காரணமா? என கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என தனக்குள் பன்முகத்தன்மைகளை கொண்டுள்ளார் தனுஷ். இவர் பவர் பாண்டி திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் புதிய திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். தனுஷ் இயக்கும் அந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடிக்கின்றார்களாம். மேலும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் திரைப்படத்திலும் விஷ்ணு விஷால் நடிக்கின்றார். ஒரே நேரத்தில் விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது என ரசிகர்கள் பேசி வருகின்றனர். முன்னதாக தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம் நிறுவனத்திற்காக விஷ்ணு விஷால் முன்பதிவு செய்யப்பட்டார். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தால் லாபம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் அந்த நிறுவனத்தை கைவிட்டார் தனுஷ். அப்போது போடப்பட்ட டீலங்கை வைத்து தான் தனுஷ் தற்போது தான் இயக்கும் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க வைப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த டீலங்கை மனதில் வைத்து தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விஷ்ணு விஷாலுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால் எது என்னமோ ஜாக்பாட் அடித்தது நம்ம விஷ்ணு விஷாலுக்கு தான். ஒரே நேரத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா என இருவரின் திரைப்படங்களில் நடிக்கின்றார்.