செல்வராகவனின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் குழப்பமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் செல்வராகவன். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அண்மையில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றதையடுத்து இயக்குனர் மோகன்ராஜ் இயக்கத்தில் பாகாசசூரன் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கின்றது. இவர் தற்போது புதிய திரைப்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர் சென்ற 2 நாட்களுக்கு முன்பாக தனது இணையதள பக்கத்தில், “எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கிக் கிடந்து வாழ்க்கையில் ஜாலியா இருக்க வேண்டும் என சுற்றித்திரிந்து காலம் முழுவதையும் வீணடித்துவிட்டு கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள் என பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது புதிய பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் நம் மனநிலை இப்படித்தான் இருக்க வேண்டும் என குறிப்பிட்டு புதுப்பேட்டை திரைப்படத்தில் தனுஷ் வலிக்கல கொஞ்சம் கூட வலிக்கல என்று வசனம் பேசிய வீடியோவை பதிவிட்டு இருக்கின்றார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பம் அடைய செய்திருக்கின்றது. செல்வராகவன் தொடர்ந்து இதுபோல பதிவுகளை பதிவிட்டு வருவதால் அவருக்கு என்னதான் ஆச்சு என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

https://twitter.com/selvaraghavan/status/1609802537548541956?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1609802537548541956%7Ctwgr%5E46279d455e806030f449eaea93e6555abce71dea%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.maalaimalar.com%2Fcinema%2Fcinemanews%2Ftamil-cinema-director-selvaraghavan-tweet-about-life-in-social-media-556190