தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க அலுவலர் நியமிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் அதனை செயல்படுத்துவதற்காகவும் இது குறித்த புகார்களை தீர்ப்பதற்காகவும் மாவட்டத்திற்கு ஒரு குறை தீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் தற்போது வேலூர் மாவட்டத்திற்கு ரஞ்சிதா என்பவர் குறை தீர்ப்பாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார்.

ஆகையால் வேலூர் மாவட்ட மக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் இருந்தால் 8925811344 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம். இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.