குஜராத் மாநிலத்தில் பாலிகானா நதிகரையில் சத்ருஞ்ஜய மலையில் சுமார் 900 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக புராணங்கள் கூறுகிறது. இந்த மலை குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

குறிப்பாக இந்த மலையில் உள்ள அனைத்து கோவில்களும் பளிங்கு கற்களால் கட்டப்பட்டவை. இந்த கோவிலுக்கு செல்ல சுமார் 3000 படிகள் ஏற வேண்டும். இந்த கோவிலில் உள்ள விக்கிரகங்களில் ஒவ்வொரு இரவும் வெள்ளி படிவுகள் தானாகவே ஏற்படுவதாகவும் அதனை அந்த குருக்கள் கடவுள் அளித்த பரிசாக நினைத்து எடுத்து செல்வதாகவும் கூறப்படுகின்றது.