தெலங்கானாவில் கோழிக்குழம்புக்கு பதில் கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவியை கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மஞ்சரில் மாவட்டம் கிஷ்தம்பேட் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கலிபெல்லி போஷம். இவருடைய  மனைவி சங்கரம்மா. போஷம்மிற்கு 50 வயது, மனைவி சங்கரம்மாவுக்கு 45 வயதாகிறது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று கோழிக்கறி வாங்கி வந்த போஷம் தன்னுடைய மனைவி சங்கரம்மாவிடம் கொடுத்து குழம்பு வைக்கும்படி கூறியுள்ளார்.  ஆனால் அவரோ அதற்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு வைத்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த போஷம் இரவில் உறங்கி கொண்டிருந்த மனைவியை கோடாரியால் வெட்டி கொன்றுள்ளார்.