இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 9.64 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள தரவுகளை கருத்தில் கொண்டால் 78 துறைகளில் 9 லட்சத்து 64 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. முக்கியமான துறைகளை மட்டும் பார்த்தால் ரயில்வேயில் 2.93 லட்சமும், உள்துறை அமைச்சகத்தில் 1.43 லட்சமும், பாதுகாப்பு அமைச்சகத்தில் 2.64 லட்சம் காலியாக உள்ளது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின் மூடிய கதவுகளை திறப்போம் என்பதை இந்தியா கூட்டணியின் உறுதி மொழியாகும். வேலையில்லா திண்டாட்டத்தின் இருளை உடைத்து இளைஞர்களின் தலைவிதி உயர போகிறது என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.