பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் கடந்த குண்டுவெடித்த வழக்கு விசாரணையில் சிசிடிவி கேமிராக்களை கைப்பற்றி பெங்களூரு காவல்துறையினர் ஆய்வு செய்ததில் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர். குண்டுவெடிப்புக்கு காரணமான அந்த நபரை பிடிக்க போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மத்திய உள்துறை மாற்றம் செய்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.