அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயல் மிக தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில் ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தென்மேற்கு அரபிக் கடலில் தேஜ் புயல் மையம் கொண்டிருந்த நிலையில் அரபிக்கடலில் இன்று அதிதீவிர புயலாக வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.