தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புது படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி-15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக ஹைதராபாத்திலுள்ள சார்மினாரில் நடந்து வருகிறது.

இதை இயக்குனர் ஷங்கர் தன் சமூகவலைதளப்பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஆர்.சி-15 திரைப்படத்தின் புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.