கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை  அருகேயுள்ள கிராமத்தில் வசிப்பவர் ரோஸ்லின் மேரி (25). சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ராஜ் மகன் தமிழரசன் (28) என்பவரும் ரோஸ்லின் மேரியும் தமிழரசனும் 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கேட்டுள்ளார். ஆனால் தமிழரசன் மறுத்ததால்  காவல் நிலையத்தில் ரோஸ்லின் மேரி புகார் அளித்தார்.

ஆனால், அந்த இளைஞர் மறுத்ததால், அவரை கைது செய்வதாக போலீசார் எச்சரித்தனர். பெண்ணின் வீட்டார் வற்புறுத்தலால், ரோஸ்லின் மேரியை திருமணம் செய்து கொண்ட தமிழரசன், சில மணி நேரங்களிலேயே ஓடி விட்டார். இதனால் அந்த இளம்பெண் மீண்டும் போலீசை அணுகினார். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.